Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

பிளஸ் 2 மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க குமரியில் சிறப்பு மையங்கள் :

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தகுதியான தனித்தேர்வர்களும் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இணைதளம் மூலம் வரும்27-ம் தேதி வரை கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி,அமலா கான்வென்ட், முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி, பூதப்பாண்டி சர்.சி.பி.எம். அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவட்டாறு அருணாசலம் மேல்நிலைப் பள்ளி, விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் பயன்பெறலாம் என, மாவட்டமுதன்மை கல்வி அலுவலகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x