பொள்ளாச்சி, புதுக்கோட்டைக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு :

பொள்ளாச்சி, புதுக்கோட்டைக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் 2,000 டன் நெல் மூட்டைகள் நேற்று மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அரைவை மில்களுக்கு 21 வேகன்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பணியை மன்னார்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஒருங்கிணைத்து மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in