Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

புதிதாக 149 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் 34 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 28 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 31 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம், கரோனா மொத்த பாதிப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 41,806-ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 28,094 -ஆகவும், வேலூர் மாவட்டத்தில் 47,861- ஆகவும் அதிகரித்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51,669-ஆக உயர்ந்துள்ளது. 50,252 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x