Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் குளறுபடி :

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி பிச்சம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 24) கரோனா முதல் தவணை தடுப்பூசி 100 பேருக்கு செலுத்தப்படுவதாகவும், அதற்கான டோக்கன் நேற்றுவழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மதியம் 1 மணி முதல் பள்ளி வளாகம் முன்பு 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அங்கு வந்த செவிலியர் 30 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கினார். எஞ்சியவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த கட்சியினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x