Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் தொடக்கம் :

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், " ஒவ்வொரு வாரம்திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கரோனா தொற்று,சட்டப்பேரவை பொதுத்தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்துக்கு மக்கள் வருவதை தவிர்க்கும் வகையில், தங்கள் குறைகளைவரும் 26-ம் தேதி முதல் திங்கள் தோறும் தொலைபேசி மூலம் தெரிவிக்க சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

எனவே, 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணுக்கு காலை10.30 முதல் மதியம் 1 மணி வரை குறைகளை தெரிவிக்கலாம். தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x