Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க எம்எல்ஏ கோரிக்கை :

விவசாய மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும் என தருமபுரி எம்எல்ஏ கோரிக்கைவிடுத்துள்ளார்.

தருமபுரி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அதகபாடியில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றை தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் இணைப்பு வழங்க வேண்டும். இண்டூர் அருகிலுள்ள தாசன்கொட்டாய் பகுதி மக்கள் குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அப்பகுதிக்கு புதிதாக மின்மாற்றி அமைத்து குறை மின் அழுத்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது, மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் கணேஷ்பாபு, பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் சக்தி, சிலம்பரசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x