Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
தருமபுரி மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்ட அளவில் யோகா ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தருமபுரி ஒன்றியம் எம்.ஒட்டப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி அ.தீபிகா பங்கேற்றார். அவர், இப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார். இம்மாணவிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா பாராட்டு தெரிவித்தார். மேலும், ஸ்மார்ட் போன், யோகா பயிற்சிக்கான சீருடை, தரை விரிப்பு ஆகியவற்றையும் பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி (அரூர்), பாலசுப்பிரமணி (தருமபுரி), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாவட்ட அலுவலர்கள் தங்கவேல், வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT