Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு : உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை

நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் உள்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லை மாவட்ட சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக 3 ஆண்டு காலத்துக்கு 2017-ல் நியமனம் செய்யப்பட்டேன். கரோனா பரவல் காரணமாக ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனது பதவிக் காலம் 2021 செப்டம்பருடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனது பணிக் காலம் முடியும் முன்பே அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ஜூன் 14 முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்துக்காக விண்ணப்பம் பெற தடை விதித்தும், விண்ணப் பித்துள்ள வழக்கறிஞர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். மனு தொடர்பாக உள்துறை கூடுதல் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x