Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

கலை இலக்கிய பெருமன்ற வைர விழா போட்டிகள் :

கலை இலக்கிய பெருமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள் ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரைஓராண்டு காலத்துக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. அன்று, ‘மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட்15-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூம் செயலி வழியே போட்டி நடைபெறும்.

இப்பெருமன்ற நிறுவனர் ப.ஜீவானந்தம் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி கவிதை மற்றும்ஆய்வுக் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. ‘செந்தமிழ் நாடிது-எங்கள் செந்தமிழ் நாடிது’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெறும் .

‘தமிழ் எங்கள் உரிமை’என்ற தலைப்பில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகளை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும விவரங்களுக்கு 97151 85309 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x