Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM
கலை இலக்கிய பெருமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
பொதுஉடைமை இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரான மறைந்த ஜீவா அவர்களால் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கப்பட்டது. அது தனது 60-வது வைரவிழா ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இதனை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகளை ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஓராண்டு காலத்துக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. அன்று, 'மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட்15-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூம் செயலி வழியே போட்டி நடைபெறும்.
இப்பெருமன்ற நிறுவனர் ப.ஜீவானந்தம் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி கவிதை மற்றும் ஆய்வுக் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. 'செந்தமிழ் நாடிது-எங்கள் செந்தமிழ் நாடிது' என்ற தலைப்பில் நடைபெறும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் தட்டச்சு செய்யப்பட்டால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கையால் எழுதப்பட்டால் 12 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
‘ தமிழ் எங்கள் உரிமை' என்ற தலைப்பில் நடைபெறும் கவிதைப் போட்டுக்கு 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகளை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97151 85309 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT