Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM

அஞ்சலக முகவர் நியமனத்துக்கு ஜூலை 30-ம் தேதி நேர்காணல் :

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் நியமனத்துக்கான நேர்காணல் ரங்கத்திலுள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 30-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வயது 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்களாக இருக்கக் கூடாது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கல்வித் தகுதி, இருப்பிடச் சான்று, ஆதார் கார்டு, பான்கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம், அவர்களின் பெயரில் தேசிய சேமிப்பு பத்திரமாகவோ அல்லது கிசான் விகாஸ் பத்திரமாகவோ எடுக்க வேண்டும். மேலும் உரிமக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும் என ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x