Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

கோவை, திருப்பூர், நீலகிரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை :

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத்தில் இமாம் இப்ராஹிம் பார்கவி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதேபோல, ஆர்.எஸ்.புரம், போத்தனூர், ரத்தினபுரி, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர்.

கரோனா ஊரடங்கு அமலில்இருப்பதால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப் பாளையம், அன்னூர், சூலூர், பெரியநாயக்கன் பாளையம், நீலம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் சிறப்புதொழுகை நடைபெற்றது.

உதகை

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதி களில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. உதகை பெரிய பள்ளிவாசல், பெட்ரேஷன் பள்ளிவாசல், காந்தல் பள்ளிவாசல், பிங்கர்போஸ்ட் பள்ளி வாசல் உட்பட பிற பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். குன்னூர் பெரியபள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், பெட்போர்ட், வெலிங்டன், அருவங்காடு, சேலாஸ் உட்பட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

திருப்பூர்

திருப்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசல், மாநகராட்சி அருகில் உள்ள பள்ளிவாசல், எஸ்ஏபி பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x