1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் : ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது

1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் :  ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புலியூர் பகுதியில், புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து, சென்னை மற்றும்புறநகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதாக வெங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் புலியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 1.50 டன் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றைப் பதுக்கிவைத்திருந்ததாக ராஜஸ்தானை மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ்ராம்(36), பிரகாஷ்(36), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in