நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா கோலாகலம் :

நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்.
நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்.
Updated on
1 min read

நத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு வழங்கி பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு அரசு வழிகாட்டுதலின்படி கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, பிச்சிப்பூ, அரளி என பல்வேறு வகையான பூக்களை பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் அதிகமாக கூடாத வகையில் கூட்டத்தை முறைப்படுத்தி அம்மனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in