திண்டுக்கல்லில் கிரிவலத்துக்கு தடை :

திண்டுக்கல்லில் கிரிவலத்துக்கு தடை :
Updated on
1 min read

திண்டுக்கல் மலைக் கோட்டையைச் சுற்றி பவுர்ணமி கிரிவலம் செல்ல ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

திண்டுக்கல் மலைக் கோட்டையை சுற்றி பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வர். கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடி பவுர்ணமி நாளான ஜூலை 23-ம் தேதி மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் செல்ல திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தடை விதித்துள்ளார். பக்தர்கள் கிரிவலம் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in