Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை :

திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேலப்பாளையம் கரீம் நகர் மஸ்ஜித்ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் தலைமை இமாம் சாகுல் ஹமீது சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கரிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் மாநில தலைவர் சும்சுல்கா ரகுமானிசொற்பொழிவாற்றினார். மாநில செயலாளர்கள் யூசுப் அலி, செய்யதுஅலி, மாவட்ட தலைவர் மஸ்வூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலப்பாளையம் அத்தியூத்து தெருவில் பெரிய குத்பா பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அப்துல்வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் இமாம்கள் அப்துல்அலீம், ஷேக் உதுமான் ஆகியோர் தலைமைவகித்தனர். அரசு காஜி முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். காயல்பட்டினம், கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

தென்காசி

தென்காசி ஜன்னத்துல் பிர்தவுஸ் ஜும்மா பள்ளிவாசல், மரைக்காயர் ஜும்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதுபோல், கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, பொட்டல்புதூர் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், ஆடு, மாடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து, பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x