மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அமமுக வலியுறுத்தல் :

மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அமமுக வலியுறுத்தல்   :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட அமமுக ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் பாலதண்டாயுதம் தலைமையில் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், எஸ்.சத்தியமூர்த்தி, மருத்துவர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், சரவண செல்வன், முருகானந்தம், லெனின், விமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மேகேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டிப்பது, தடுப்பணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவது, கரோனா தடுப்பூசி போடுவதில் நிலவும் தட்டுப்பாட்டை போக்க கேட்டுக் கொள்வது, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற உள்ளாட்சித் தேர்தல்களில் தீவிர களப்பணியாற்றி வெற்றிபெறுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in