Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு :

2019-ல் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, மாவட்ட வருவாய் அலுவலராக கா.பிரியா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மாநில நில நிர்வாக ஆணையரகத்தில் இணை இயக்குநராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்து வந்த இரா.மேனுவல்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜுக்கு, வருவாய் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x