Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க அழைப்பு :

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிக்கையில், "கணவரால் கைவிடப்பட்டு குழந்தைகளுடன் தனியே வசித்துவரும் பெண்கள், தங்களது ஆதார் அட்டை, குழந்தைகளின் ஆதார் அட்டை அல்லது பிறப்புச்சான்றிதழ், குடியிருக்கும் வீடு, வாடகை வீடு எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், சொந்த வீடு எனில் வீட்டு வரி ரசீது ஆகியவற்றுடன், தங்களது வட்டத்திலுள்ள தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள் வழங்கல்) / வட்ட வழங்கல் அலுவலர்களை அணுகி, புதிய குடும்பஅட்டை பெற விண்ணப்பம்அளிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x