திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா :

திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டியில் முனியப்பன் கோயில் விழாவின் ஒருபகுதியாக மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். 20 ஆண்டுகளாக நல் லாம்பட்டியில் உள்ள ராஜா குளத்துக்கு நீர்வரத்து இல்லாத தால் மீன்பிடித் திருவிழா நடை பெறாமல் இருந்தது.

இந்த ஆண்டு ராஜா குளத்துக்கு தண்ணீர் வரத் தொடங்கியதால் முனியப்பன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் நல்லாம்பட்டி, வாழைக்காபட்டி, கண்ணாபட்டி, வேடபட்டி என 18 பட்டி கிராம மக்கள் கலந்துகொண்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர். கட்லா, ஜிலேபி, ரோகு என பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in