இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு :

இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு  :
Updated on
1 min read

தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் 46-வது வார்டு மற்றும் 47-வது வார்டில் 2021-ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பி.சந்தனசேகர் அமைப்பின் நோக்கங்கள் பற்றி பேசினார். 46-வது வார்டு தலைவராக முத்து லட்சுமணன், செயலாளராக சக்தி, துணை செயலாளர்களாக அர்ஜுனன், ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டனர்.

47-வது வார்டு தலைவராக ராஜேஷ், செயலாளராக மாரிமுத்து, துணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், பாலா தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலவேசம், ஜீவானந்தம், ராமமூர்த்தி, காளீஸ்வரன், மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in