3 இரு சக்கர வாகனங்கள் திருட்டு :

3 இரு சக்கர வாகனங்கள் திருட்டு  :
Updated on
1 min read

ஆரணியில் 3 இரு சக்கர வாக னங்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி நகரம் பரசுராமன் தெருவில் வசிப்பவர் திருமாறன். இவர், தனது வீட்டின் முன்பு நேற்று முன் தினம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதனை, 2 மர்ம நபர்கள் திருடிச் செல்வது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

மேலும், ஆரணி நகரம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் மோகன் மற்றும் பாப்பாத்தியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சங்கர் ஆகியோரது இரு சக்கர வாகனங்களும் திருடு போனது.

இது குறித்து ஆரணி நகர காவல்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றவர் களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in