 முஷ்ணம் அருகே கோயிலில் பணம் நகை திருட்டு :

 முஷ்ணம் அருகே கோயிலில் பணம் நகை திருட்டு :
Updated on
1 min read

முஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக தியாகராஜன் நேற்று முன்தினம் காலை பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை கோயிலின் மூன்று கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. தகவலறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பூசாரிகோயிலுக்கு சென்று பார்த்தனர்.உண்டியல் உடைக்கப்பட்டிருந் தது. அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் நகை திருடப் பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் பூசாரி தியாகராஜன் சோழதரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in