Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஜூம் ஆப் வாயிலாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை,கூட்டுறவுத் துறை,

ஆதி திராவிடர் நலத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து ஜூம் ஆப் வாயிலாக கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம். தனிநபர் தங்களின் குறைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x