Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

என்.சங்கரய்யா 100-வது பிறந்தநாள் விழா :

கும்பகோணம்/ தஞ்சாவூர்/ திருவாரூர்/ புதுக்கோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் விழா கும்பகோணத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி செ.ராமலிங்கம், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, விசிக மண்டலச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி பிறந்தநாள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கரய்யா வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு சார்பில், ரயிலடியில், என்.சங்கரய்யாவின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். எம்எல்ஏ க.மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பாண்டியன் தலைமையில் மாவட்ட நிர்வாகி எம்.ஜியாவுதீன் கட்சிக் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x