போலி நகை மூலம் ரூ.4.52 ‌கோடி‌ மோசடி மதிப்பீட்டாளர் கைது :

போலி நகை மூலம் ரூ.4.52 ‌கோடி‌ மோசடி மதிப்பீட்டாளர் கைது  :
Updated on
1 min read

மீஞ்சூரில் அரசு வங்கி கிளையில் 137 வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகள் மூலம் 370நகைக் கடன் பெற்று, ரூ.4.52 ‌கோடி‌ மோசடி செய்தது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மேகநாதன்(47). நகை மதிப்பீட்டாளரான இவர், மீஞ்சூரில் உள்ள அரசு வங்கி கிளை ஒன்றில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மேகநாதன் கடந்த 2018-ம் ஆண்டு முதல்2020-ம் ஆண்டு வரையான 3ஆண்டுகளில் 137 வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகள் மூலம் 370 நகை கடன் பெற்று, ரூ.4.52 ‌கோடி‌ மோசடி செய்தது வங்கி அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, வங்கி கிளை துணை பொது மேலாளர் திருவள்ளூர் எஸ்பி., வருண்குமாரிடம் புகார் அளித்தார். அதன்மீது நடத்திய விசாரணையின்படி மேகநாதன் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in