குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது :

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது  :
Updated on
1 min read

தி.மலை மாவட்டத்தில் குற்ற வழக்கு மற்றும் சாராய வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தி.மலை சிவசக்தி கோயில் தெருவைச் சேர்ந்த சந்துரு (22) மற்றும் புதுவாணியங்குளம் தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (23) ஆகியோர் வழிப்பறி வழக்கில் கிராமிய காவல் துறையினரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அதேபோல், செங்கம் வட்டம் பரமனந்தல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிச்சாண்டி (45) என்பவர் சாராய வழக்கில் செங்கம் மதுவிலக்கு காவல் பிரிவினரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இவர்கள், மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையேற்று சந்துரு, பிரசாந்த் மற்றும் பிச்சாண்டி உள்ளிட்ட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in