Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
குன்னூர் அருகேயுள்ள பெட்போர்ட் பகுதியில் இ-காம் எக்ஸ்பிரஸ் என்ற கூரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கான தொகை சுமார் ரூ.1 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணத்தை திருடிச்சென்றதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள கடை வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT