Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
கோவை: சென்னையில் உள்ள புத்தி கிளீனிக்குடன் இணைந்து, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில், ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, புத்தி கிளீனிக் நிறுவனர் மருத்துவர் இ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி இம்மையத்தை திறந்துவைத்தனர். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித், தலைமைச் செயல் அலுவலர் சி.வி. ராம்குமார், ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மற்றும் முதன்மையாளர் டாக்டர் பி.சுகுமாரன் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர். இம்மையத்தின் சிகிச்சையானது ஆயுர்வேத முறையுடன், நவீன மறுவாழ்வு அறிவியலை உள்ளடக்கிய பாரம்பரிய சிகிச்சை முறையைக் கொண்டது. 14 வகையான மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கியது. 360 டிகிரியில் நோயாளிகளின் உடல் மற்றும் மன நலனை பழங்கால முறையில் மதிப்பீடு செய்து, நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து பயனடையச் செய்கிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT