Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர்கள் குறை தீர் கூட்டம் :

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ம் தேதி காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை Pension Adalat என தபால் உறையின் மீது எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி - 635001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட்டு வரும் 23-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x