Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸார் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து தனியார் பேருந்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வராஜ், தொகுதி பொறுப்பாளர் சஞ்சய், வட்டாரத் தலைவர் கரு.கணேசன், நகர் தலைவர்கள் எம்.கணேசன், நாகராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT