Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தை சேர்ந்தவர் கார்மேகம் (60). இவரது மனைவி ரெஜினா மேரி (50). விருதுநகரில் உள்ள இவர்களது மகள் புனிதா நேற்று முன்தினம் தனது பெற்றோருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த புனிதா, நேற்று காலை கட்டாலங்குளம் வந்தார். வீட்டுக்குள் ஒரு அறையில் கார்மேகம் படுகாயத்துடன் கிடந்தார். மற்றொரு அறையில் ரெஜினா மேரி இறந்துகிடந்தார்.
நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் பத்மாவதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கார்மேகம் அனுமதிக்கப்பட்டார்.
கோவில்பட்டி பங்களா தெருவில் வசிக்கும் கருப்பசாமி (74) என்பவரின் நிலம் கட்டாலங்குளத்தில் கார்மேகம் வீட்டருகே உள்ளது. அந்த நிலம் விற்பனை தொடர்பான தகராறில் இரும்பு கம்பியால் ரெஜினா மேரியும், கார்மேகமும் தாக்கப்பட்டது தெரியவந்தது. கருப்பசாமியை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT