Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
நாகை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 8 டிராக்டர்கள், 8 நெல் அறுவடை இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட உள்ளன. இதில், நெல் அறுவடையைப் பொறுத்தவரை ஈரப்பதம் அதிகமுள்ள வயல்களில் அறுவடை செய்வதற்கான அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.1,415-க்கும், காய்ந்த வயல்களில் அறுவடை செய்வதற்கான சக்கர வகை அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.875-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இதேபோல, சிறுபாசனத் திட்டத்தின்கீழ், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க சிறு விசைத்துளைக் கருவிகள் விவசாயிகளுக்கு குறைந்த மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள், நாகையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தில் வாடகை முன்பணம் செலுத்தி, பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, நாகை உதவி செயற்பொறியாளரை 9442240121, செயற்பொறியாளரை 9442049591 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT