Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்று வீசி வருகிறது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது. கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகள் கடும்சீற்றத்துடன் காணப்பட்டன. கடல் சீற்றத்தால் மீன்பிடி பணி பாதிக்கப்பட்டது. விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லவில்லை. குறிப்பாக சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், புதுக்கிராமம், சிலுவைநகர், வாவத்துறை, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT