Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

குமரியில் 3 நாட்களுக்கு பின் - மீண்டும் தடுப்பூசி முகாம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3,29,053 பேர் முதல் தவணையும், 63,477 பேர் இரண்டு தவணைகளும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி வராமல் தட்டுப்பாடு நிலவியதால் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக யாருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் 11 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. நேற்று மாவட்டம் முழுவதும் 35 முகாம்கள் நடைபெற்றன. இதில் ஆன்லைன் டோக்கன் பெற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், சிறப்பு முகாம்களில் நேரடியாக டோக்கன் வழங்கப்பட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x