Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). மர வியாபாரம் செய்கிறார். நேற்று மாலை எப்போதும்வென்றான் அருகே எத்திலியப்பநாயக்கன்பட்டி வழியாக காரில் வந்தபோது, முன்பகுதியில் புகை வந்துள்ளது. காரை நிறுத்தி பார்த்தபோது, புகை அதிகமாகி திடீரெனதீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால், கார் முழுவதும் தீ பரவியது. கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. எப்போதும்வென்றான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT