Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

கொள்முதல் நெல் மூட்டைகளுக்கு : பணம் வழங்காமல் இழுத்தடிப்பு : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கலவை பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வெள்ளம்பி, மேச்சேரி, தோனிமேடு ஆகிய மூன்று கிராமங்களில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை சரியான நேரத்தில் எடை போடாமல் அதிகாரிகள் இருப்பதுடன் எடை போடப்பட்ட நெல் மூட்டைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக உரிய தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்த வட்டாட்சியர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அப்போது, நெல் மூட்டைகள் மழையில் நனைத்து சேதமடைந் ததால் அரசுக்குத்தான் இழப்பு ஏற்படும் என்றும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x