Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

ராமநதி- ஜம்புநதி கால்வாய் பணிக்கு - நிலம் கையகப்படுத்துவதற்கு ஆவணங்கள் சரிபார்க்கும் முகாம் :

தென்காசி

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஜூலை 14, 15, 16-ம் தேதிகளில் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டுக் குழு தலைவர் ராம.உதயசூரியன் கூறியிருப்பதாவது:

ராமநதி- ஜம்புநதி இணைப்பு மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக, நில உரிமையாளர்களை சந்தித்து, ஆவணங்களை சரிபார்க்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வட்டாட்சியர், உதவி வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய தனிநபர் பேச்சுவார்த்தை குழுவினர் சிறப்பு முகாம் நடத்த உள்ளனர். இம்முகாம் வரும் 14-ம் தேதி கடையம் பெரும்பத்து, 15-ம் தேதி ஆவுடையானூர், 16-ம் தேதி வெங்காடம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

எனவே, அந்தந்த பகுதி நில உரிமையாளர்கள் முகாம்களில் கலந்துகொண்டு தங்களது ஆவணங்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து விரைவில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x