ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு :

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு :
Updated on
1 min read

தஞ்சாவூர் மானோஜிபட்டி பல்லவன் நகரைச் சேர்ந்தவர் மோகன்(40), ரயில்வே ஊழியர். இவர் நேற்று முன்தினம் ஈரோட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர், நேற்று திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு மற்றும் வீட்டுக்குள்ளிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, 5 பவுன் நகை, ரூ.1.40 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in