

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஏரிக்கான நீர்வரத்துக் கால்வாய் நள்ளிரவில் சேமடைந்ததால் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கான நீர்வரத்தை உறுதி செய்ய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக-ஆந்திரஎல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.
பாலாற்றுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக நீர்வரத்து இருப்பதால் நேற்று ஆம்பூரை கடந்து வெள்ள நீர் சென்றது.
ஆம்பூர் அருகேயுள்ள விண்ண மங்கலம் ஏரி பாலாற்றை நீராதார மாக கொண்டுள்ளது. பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஏரிக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்தது.
ஏறக்குறைய பாதி அளவுக்கு ஏரி நிரம்பிய நிலையில் நீர்வரத்துக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பாலாற்றுக்கு தண்ணீர் சென்றது.
இதுகுறித்த தகவலின்பேரில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.வில்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சேதமடைந்த நீர்வரத்து கால்வாய் பகுதியை அதிகாரிகள் குழுவினருடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கான நீர்வரத்தை உறுதி செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் உடனி ருந்தார்.
நீரை சேமிக்க கோரிக்கை
எனவே, தமிழக அரசு பாலாற் றில் அரிதாக வரும் வெள்ள நீரை விரயமாக்காமலும் நீரை சேமிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏரிகளின் மதகுகளை சீர்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும். வரத்துக்கால் வாய்களை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். மேலும், ஏரிகளின் வரத்துக் கால்வாய்கள் ஆற்றில் தொடங்கும் முகத்துவார பகுதி களில் கட்டப்பட வேண்டும்.
ஆறு பள்ளமாகவும் ஏரிவரத்துக் கால்வாய்கள் உயரமாகவும் உள்ள தால் ஆற்று நீர் எளிதாக ஏரிக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்காக, பாலாற்றில் வாய்ப் புள்ள இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும்’’ என தெரிவித் துள்ளார்.
மழையளவு விவரம்