- மாணவி தற்கொலை :

-  மாணவி தற்கொலை :
Updated on
1 min read

விருதுநகர் அருகே செவிலியர் பயிற்சி மாணவி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகர் அருகே உள்ள முத்தாள் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் சத்யபிரியா (20). விருதுநகரில் உள்ள ஒரு தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்தார். கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பைத் தொடர முடியாமல் இடை நின்றார். கடந்த 3 மாதங்களாக அதிக வயிற்று வலியால் சத்யபிரியா அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அல்லம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சத்யபிரியா தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in