Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM

இணைய வழி கருத்தரங்கம் :

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில், ‘வாசிப்பை சுவாசிப்போம்' எனும் தலைப்பில் இணைய ழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளர் கி.வரதராஜன் தலைமை வகித்தார். எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

‘வாசித்தல் சுவாசித்தல்' எனும் தலைப்பில் சுமதி பிராங்கிளின், வேல.ராமமூர்த்தியின் சிறுகதைகள் குறித்து முத்துமாறன், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கடவுளின் நாக்கு' நூல் குறித்து சுரேஷ் ஆகியோர் கருத்துரையாற்றினர். பாலமுருகன், அ.சலீம் பாட்சா, பேராசிரியர் அ.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x