

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடந்த ஆய்வுக்கூட் டத்துக்குப் பின், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா 3-வது அலை ஏற்பட்டால், குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தி வரு கிறோம்.
தமிழகத்தில் கரோனா பாதி ப்பால் தாய்-தந்தை ஆகிய இரு வரையும் இழந்த குழந்தைகள் 93 பேர் மற்றும் இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 3,593 பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.