

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று 214 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 27 பேரும், வட்டார அளவில் எடப்பாடியில் 16, ஆத்தூரில் 13, தாரமங்கலத்தில் 11, சேலத்தில் 9, மேச்சேரியில் 8, காடையாம்பட்டி, வீரபாண்டியில் தலா 6, தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லி, ஓமலூர், நங்கவள்ளி, கொங்கணாபுரம், கொளத்தூரில் தலா 5, சங்ககிரி, பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா 4, நகராட்சி பகுதியில் மேட்டூரில் 13, ஆத்தூரில் 2 பேர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 50 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.