Published : 08 Jul 2021 03:14 AM
Last Updated : 08 Jul 2021 03:14 AM

ஜமாபந்தி மனுக்களை போடுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் பெட்டி :

பெரம்பலூர்

பெரம்பலூர் ஆட்சியர் ப. வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 1430-ம் பசலிக்கான(2020-21) ஜமாபந்தி தொடர்பான மனுக்களை உரிய ஆவணங் களுடன் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் தாங்களாகவோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாகவோ ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து, அதற்குரிய ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி யிலும் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை பொதுமக்கள் போடலாம். இம்மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு பதில் அளிக்கப்படும் என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x