Published : 08 Jul 2021 03:15 AM
Last Updated : 08 Jul 2021 03:15 AM

புதிதாக 230 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று 230 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 212 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 53 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. 74 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,343 -ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x