விருதுநகர் மாவட்டத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம் :

விருதுநகர் மாவட்டத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகர் மைதானப் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைத்து ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விருதுநகர் எஸ்.பி.ஐ. வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாநில துணைத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர்கள் சாரல், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in