பேரணாம்பட்டு வாட்ஸ்-அப் குழு மீது இந்து முன்னணியினர் புகார் மனு :

பேரணாம்பட்டு வாட்ஸ்-அப் குழு மீது இந்து முன்னணியினர் புகார் மனு :
Updated on
1 min read

பேரணாம்பட்டில் செயல்படும் வாட்ஸ்-அப் குழுவின் மீது இந்து முன்னணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், பேரணாம்பட்டு பகுதியில் சுமார் 236 பேருடன் செயல்படும் வாட்ஸ்-அப் குழு ஒன்று இயங்கி வருகிறது. இதன் அட்மின் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவராக உள்ளார். இந்த குழுவில் இந்திய தேசியக் கொடியையும், இந்து தெய்வங்களையும் ஆபாசமாக சித்தரித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அதிகம் பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

எனவே, இவர்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in