Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

செங்கை, காஞ்சியில் ஜூலை 10-ல் தேசிய மக்கள் நீதிமன்றம் :

செங்கல்பட்டு

செங்கை, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும் வழிகாட்டுதலின்படியும் வரும் 10-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக ஜூலை 5-ம் தேதி (இன்று) முதல் தினசரி பிற்பகல், வழக்குகளில் சமரசம் பேச வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x