Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் 3 பேர் உயிரிழப்பு :

கடலூர்/கள்ளக்குறிச்சி

கடலூர் மாவட்டத்தில் நேற்று 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 94 பேர் உட்பட இதுவரை 56,664 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 770 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 195 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் 42,778பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை 332 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x